கோவை : கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர் என தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை : கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர் என தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் துரைசங்கர் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் காவல்துறையில் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை துடியலூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் குமார் குற்றவாளி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தோடு தொடர்புபடுத்தி சிலர் சமூக வலை தளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் துறை துணை ஆணையரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.