கோவை : குனியமுத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இந்திய தன்னார்வ மற்றும் சமூக அறக்கட்டளை வழங்கியது.
கோவை : குனியமுத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இந்திய தன்னார்வ மற்றும் சமூக அறக்கட்டளை வழங்கியது.

குனியமுத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 1,400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டும், சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் என்ற நோக்கில், இந்திய தன்னார்வ மற்றும் சமூக அறக்கட்டளை மற்றும் விகார்டு நிறுவனம் இணைந்து ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைப் பொருத்தியது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியை அறக்கட்டளையைச் சேர்ந்த விக்னேஷ் துரை, தீப்தி ரோமெஷ் மற்றும் ராஜ் திலக் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும் அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.