கோவை : நாடாளுமன்றத் தேர்தலில் முத்திரை சீட்டு வாக்குபெட்டி நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பதாகைகள் ஏந்தியபடி வந்து சமூக ஆர்வலர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை : நாடாளுமன்றத் தேர்தலில் முத்திரை சீட்டு வாக்குபெட்டி நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பதாகைகள் ஏந்தியபடி வந்து சமூக ஆர்வலர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை உடையாம்பாளையம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லெனின்ராஜ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "எல்லா தேர்தல்களிலும் ஜனநாயக கடமையாக தவறாமல்தான் வாக்களித்து வருகின்றேன். தேர்தல் ஆணையம் இயந்திர வாக்குப்பதிவில் முறைகேடுகளும் நடக்காது என விளக்கமளித்தாலும், உலகில் பல்வேறு நாடுகள், இதில் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளதாக தொடர்ந்து கூறி வருகிறது.
எனவே, இதனை தவிர்த்து பழைய முத்திரை சீட்டு வாக்கு அளிக்கவே விரும்புகிறேன். மேலும், இதனை விரும்புபவர்களும் உள்ளனர். தேர்தல் ஆணையம் மாற்று யோசனை செய்து, அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்துள்ளேன். இப்படி செய்வதன் மூலம் அதிக வாக்குகள் பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளது," என தெரிவித்தார்.