கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் என்.ஏ.பொன்னுசாமி இன்று கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் என்.ஏ.பொன்னுசாமி இன்று கோவையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் என்.ஏ. பொன்னுசாமி பேசியதாவது :- கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த வாரம் கோவையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த அணிக்கு ஆதரவு அளிப்பது என்று விவாதிக்கப்பட்டது. அதனடிப்படையில், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அ.தி.மு.க. அரசு ஆதரவளிப்பதை முன்னிட்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதன் அடிப்படையிலும், விவசாயிகள் அனைவரும் அ.தி.மு.க. கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்கவுள்ளோம், என்றார்.
மேலும், விவசாயிகள் சங்கத்தின் மூத்த தலைவர் ஐயா.நாராயணசாமிக்கு நினைவு மண்டபம், அவினாசி -அத்திக்கடவு திட்டம் ஆகியவற்றை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளான ஆனைமலை - நல்லாறு திட்டம், 60 வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.5,000 வழங்குதல், அகால மரணம் அடையும் விவசாயிகளுக்கு 10 லட்சம் நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவதாக அ.தி.மு.க. கூட்டணி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், சங்கத்தின் சார்பில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம், என அவர் கூறினார்.