கோவை : பாடப்புத்தகம், காலணி, விளையாட்டு சீருடை உள்ளிட்ட பொருட்களை அதிக கட்டணத்திற்கு வாங்க கட்டாயப்படுத்துவதாக அமிர்தா வித்யாலயா பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை : பாடப்புத்தகம், காலணி, விளையாட்டு சீருடை உள்ளிட்ட பொருட்களை அதிக கட்டணத்திற்கு வாங்க கட்டாயப்படுத்துவதாக அமிர்தா வித்யாலயா பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை நல்லம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் வரும் 2019-20ம் ஆண்டிற்கான பாட புத்தகங்களை வழங்க வேண்டும் எனில், காலணி, விளையாட்டு சீருடை உள்ளிட்ட பொருட்களை அதிக கட்டணத்திற்கு வாங்க கட்டாயப்படுத்துவதாக கூறி மாணவர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கை எடுக்ககோரி மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களிடம் மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், “கடந்த ஆண்டும் இதேபோல் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினர். 2,500ரூபாய்க்கு வாங்கப்பட்ட பொருட்களை இந்த ஆண்டு 5,000 ரூபாய் என அதிக விலை நிர்ணயம் செய்து உள்ளனர். தேர்வு கட்டணத்தை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 6,000 ரூபாய் அதிகரித்து உள்ளனர். மேலும், 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இதுவரை மூன்று தவணைகளாக பணம் செலுத்தபட்டு வந்த நிலையில், ஒரே தவணையில் பணம் கட்ட சொல்லி நிர்பந்திக்கின்றனர். எனவே, அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம்,” என தெரிவித்தனர்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலரை அனுப்பி விசாரணை நடத்த்கப்படும் என உறுதி அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.