வறட்சியின் காரணமாக நீர் ஊற்று போல காட்சியளிக்கும் கோவை குற்றாலம்

கோவை : கோடை வறட்சியின் காரணமாக கோவையில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவியின் நீர் இருப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.


கோவை : கோடை வறட்சியின் காரணமாக கோவையில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவியின் நீர் இருப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

கோடை கால வறட்சியின் காரணமாக கடந்த 26-ம் தேதி முதல் கோவை குற்றாலத்தில் இயற்கை சுற்றுலாவிற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.



தண்ணீர் இன்றி வறட்டியாக சூழல் நிலவுவதால், கோவை குற்றாலம் அருவி, மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக கோவை மாவட்ட அலுவலர் டி.வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். மேலும், இந்தப்பகுதியில் இருக்கும் ஒரே நீர் ஆதாரம் கோவை குற்றாலம் அருவிதான் என்பதால், இந்த சமயங்களில் நீரைத் தேடி வரும் காட்டு யானைகளின் நடமாட்டமும் அதிகரித்து இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். 



இங்கு வசித்து வரும் மலைக்கிராம மக்கள் மட்டுமே அருவியை குளிப்பற்கு மற்றும் இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், கோவை குற்றாலம் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், எந்தநேரமும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகவும் இயற்கை சுற்றுலா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையறியாமல் வரும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.



இதனிடையே, வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்கும் வகையிலான வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு வன ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...