கோவை : நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நீலகிரி தொகுதிக்கான தேர்தல் பொது மேற்பார்வையாளர் உசன் லால் ஆலோசனை நடத்தினார்.
கோவை : நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நீலகிரி தொகுதிக்கான தேர்தல் பொது மேற்பார்வையாளர் உசன் லால் ஆலோசனை நடத்தினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மண்டல அதிகாரிகள், பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துதல் மற்றும் மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அமைதியான, நியாயமான தேர்தலை நடத்திவதற்கான அனைத்து விதிகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு மையம், ஊடக கண்காணிப்பு மையம் மற்றும் ஒற்றை சாளர சான்றளிப்பு முறை மையங்களை நீலகிரி தொகுதிக்கான தேர்தல் பொது மேற்பார்வையாளர் உசன் லால் பார்வையிட்டார்.