கோவை : சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட முக்கியக் குற்றவாளி சந்தோஷுடன் மருத்துவமனை வந்தவரும் குற்றவாளியா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவை : சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட முக்கியக் குற்றவாளி சந்தோஷுடன் மருத்துவமனை வந்தவரும் குற்றவாளியா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பன்னிமடை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், டி.என்.ஏ. பரிசோதனையில், சந்தோஷ்குமார் குற்றவாளி என்பது நிரூபணமானது.
முன்னதாக, நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள "எல்லோ ஜோன்" தீவிர சிகிச்சை பிரிவிற்கு காவல்துறையினர் சிறுமி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சந்தோஷ்குமார் ரகசியமாக அழைத்து வரப்பட்டார். இது மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. அதில், குற்றவாளி சந்தோஷுடன் இன்னொரு நபரும் மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அந்த நபரும் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய நபரா..? அல்லது காவல் சீருடையில் இல்லாத போலீஸ்காரரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பன்னிமடை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், டி.என்.ஏ. பரிசோதனையில், சந்தோஷ்குமார் குற்றவாளி என்பது நிரூபணமானது.
முன்னதாக, நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள "எல்லோ ஜோன்" தீவிர சிகிச்சை பிரிவிற்கு காவல்துறையினர் சிறுமி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சந்தோஷ்குமார் ரகசியமாக அழைத்து வரப்பட்டார். இது மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. அதில், குற்றவாளி சந்தோஷுடன் இன்னொரு நபரும் மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அந்த நபரும் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய நபரா..? அல்லது காவல் சீருடையில் இல்லாத போலீஸ்காரரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.