கோடை வெயிலின் தாக்கத்தால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு : மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம்

நீலகிரி : கோடை வெயில் அதிகரித்து காணப்படுவதால், குளிர்ச்சியான காலநிலையை அனுபவிப்பதற்காக நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.

நீலகிரி : கோடை வெயில் அதிகரித்து காணப்படுவதால், குளிர்ச்சியான காலநிலையை அனுபவிப்பதற்காக நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை மலை ரயில் மற்றும் உதகை, குன்னூர் ரயில் நிலையங்களுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான உதகைக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தருகின்றனர். அவர்கள் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.



தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவடைந்துள்ளது. மேலும், சமவெளி பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரித்து விட்டது. 

இதனால், குளு, குளு காலநிலை நிலவும் நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வர தொடங்கி உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. 



இவர்கள் மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உதகை மலை ரயிலில் சென்றபடி கேத்தி பள்ளத்தாக்கு, தேயிலை தோட்டங்கள், இயற்கை எழில் மிகுந்த காட்சிகள், பசுமையான மரங்கள், மேகக்கூட்டம் மற்றும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க ஏதுவாக இந்த மலைரயில் பயணம் அமையும். இந்த மலை ரயில் பயணம் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக மகிழ்சியை தருவதால், எப்போதும் மலைரயில் நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...