உதகை தேனிலவு படகு இல்லத்தை நிரந்தரமாக புதுப்பிக்க சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தல்

நீலகிரி : உதகையில் உள்ள தேனிலவு படகு இல்லத்தை நிரந்தரமாக புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : உதகையில் உள்ள தேனிலவு படகு இல்லத்தை நிரந்தரமாக புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உதகையில் சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் உதகை ஏரிக்கு சென்று, அங்கு படகு சவாரி செய்வது வழக்கம். கோடை காலத்தை அனுபவிக்க அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தரும்போது, அனைவரும் ஒரே சமயத்தில் படகு சவாரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. 

மேலும், வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் உருவானது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் நலன் கருதி சுற்றுலாத்துறை சார்பில் ஏரியின் மறு கரையில் புதிதாக ஒரு படகு இல்லம் ஒரு கோடி ரூபாய் செலவில் 2001 மற்றும் 2006 காலகட்டத்தில் அமைக்கப்பட்டது. 

ஆனால், இவை உதகையில் காணப்படும் குளிர், பனி, மழையினை தாங்கும் அளவு இல்லாததால், இந்த படகு இல்லத்தில் உள்ள மேற்கூரைகள் மற்றும் நடைபாதை ஆகியன பழுதடைந்து காணப்பட்டன. 



சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய செல்லும் இடம் பழுதடைந்து, கூரைகள் தொங்கி கொண்டிருந்தன, எப்போது வேண்டுமானாலும், இந்த கூரைகள் இடிந்து விழும் நிலையில் இருந்தது. சீசனுக்கு மட்டும் அவ்வப்போது, பழுது பார்த்து வந்தாலும் நிரந்தரமாக தீர்வு காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி தேனிலவு படகு இல்லத்தில் கான்கிரிட் கட்டடங்கள் அமைத்து நிரந்தர தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...