தேர்தல் விழிப்புணர்வு ரயிலை வரவேற்ற கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தேர்தல் விழிப்புணர்வு ரயிலை கோவையில் இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வரவேற்றார்.


கோவை : நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தேர்தல் விழிப்புணர்வு ரயிலை கோவையில் இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வரவேற்றார்.



இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் 100 சதவிகித வாக்குப்பதிவை செலுத்திட வலியுறுத்தும் வகையில், பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. 

நமது மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கினை அடைய மாவட்ட நிர்வாகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு சுவரொட்டிகள், குறும்படங்கள், வீதிநாடகம், தெருக்கூத்துகள், துண்டுப்பிரசுரங்கள், கையெழுத்து இயக்கங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி, இன்று வாக்குப்பதிவின் மூலம் ஜனநாயக கடமை ஆற்றுவதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் 100 சதவிகித வாக்களிப்பதன் அவசியத்தினை உணர்த்திடும் விதமாக, நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கென்று தலைநகர் டெல்லியிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை செல்லக்கூடிய தேர்தல் விழிப்புணர்வு ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. 



இந்த ரயிலின் பயணிகள் பெட்டிகள் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட (12626) கேரளா அதிவிரைவு பயணிகள் ரயிலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.இராசாமணி இன்று அதிகாலை 5.00 மணியளவில் கோவை ரயில் நிலையத்தில் வரவேற்றார். தொடர்ந்து, ரயில் பயிணிகளிடம் வாக்காளர்களின் ஜனநாயக கடமை குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு தட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) தனலிங்கம், சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலை மேலாண் இயக்குநர் ஆர்.சிவக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் எஸ்.ஆர்.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நலல் தம்பி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், மாநராட்சி உதவி ஆணையர்கள் செந்தில் அரசன், செல்வம், கோவை ரயில்நிலைய நிலைய அலுவலர்கள் ஜீமன், யசோதாதேவி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...