கோவை : மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுபெற்ற சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் ஆர்.வி. ரமணிக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.
கோவை : மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுபெற்ற சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் ஆர்.வி. ரமணிக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.

மருத்துவத்துறையில் பெரும் பங்கு ஆற்றியதற்காக சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் ஆர்.வி. ரமணிக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த நிலையில், கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு இயக்கம், கோ இந்தியா, கொடிசியா, கோவை வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருதுபெற்ற மருத்துவர் ஆர்.வி. ரமணி பேசுகையில், "எங்கள் சங்கரா கண் மருத்துவமனையின் வளர்ச்சிக்கும், இதன் தொண்டு பணிகளுக்கும் பெரிதும் உதவிகரமாக இருந்த கோவையின் முக்கிய தொழில் அமைப்புகளுக்கும், கோவை மக்களுக்கும் எங்களது மருத்துவமனை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார்.


மருத்துவத்துறையில் பெரும் பங்கு ஆற்றியதற்காக சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் ஆர்.வி. ரமணிக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த நிலையில், கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு இயக்கம், கோ இந்தியா, கொடிசியா, கோவை வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருதுபெற்ற மருத்துவர் ஆர்.வி. ரமணி பேசுகையில், "எங்கள் சங்கரா கண் மருத்துவமனையின் வளர்ச்சிக்கும், இதன் தொண்டு பணிகளுக்கும் பெரிதும் உதவிகரமாக இருந்த கோவையின் முக்கிய தொழில் அமைப்புகளுக்கும், கோவை மக்களுக்கும் எங்களது மருத்துவமனை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார்.
