கோவை : பீளமேடு அருகே உள்ள யுனிவர்சல் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை : பீளமேடு அருகே உள்ள யுனிவர்சல் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பீளமேடு பகுதியில் யுனிவர்சல் குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற நிதி நிறுவனம் கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கிளை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தினர் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது. அதன் பேரில், அந்நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பீளமேட்டில் உள்ள அலுவலகத்தில் 5 அதிகாரிகள் இன்று மாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அலுவலக பணியாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பீளமேடு பகுதியில் யுனிவர்சல் குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற நிதி நிறுவனம் கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கிளை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தினர் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது. அதன் பேரில், அந்நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பீளமேட்டில் உள்ள அலுவலகத்தில் 5 அதிகாரிகள் இன்று மாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அலுவலக பணியாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.