கோவை : கோவை மத்திய சிறையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பொருட்கள் கைதிகளுக்கு வழங்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, மாநகர போலீசார் இன்று திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : கோவை மத்திய சிறையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பொருட்கள் கைதிகளுக்கு வழங்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, மாநகர போலீசார் இன்று திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மத்திய சிறையில் பீடி, சிகரெட், கஞ்சா மற்றும் செல்போன் போன்ற அனைத்து தடை செய்யப்பட்ட பொருட்களும் இரண்டாம் நிலை காவலர்கள் மூலம் கைதிகளுக்கு வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதேபோல, சிறைத்துறை நிர்வாகமே சிறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்களின் சட்டவிரோத நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, மத்திய சிறை கண்காணிப்பாளர் தகவல் பலகையில் அறிக்கையையும் வெளியிட்டிருந்தார்.
அதாவது, 2017-ம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்டு சிறையில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலை காவலர்கள் ஒரு சிலர் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற இதரப் பொருட்களை சிறைக்குள் கடத்துவதாகவும், தொடரும்பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலாக எழுத்து வடிவில் அறிவிப்பு பலகையில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று மாலை சுமார் 3.20 மணியில் இருந்து 4.50 மணி வரை கோவை மத்திய சிறையில் வெடிமருந்து தடுப்பு காவல் ஆய்வாளர்கள் மோகன் பிள்ளை, ராஜேஸ் ஆகியோர் தலைமையில் 31 காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது சிறையின் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதனால், சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மத்திய சிறையில் பீடி, சிகரெட், கஞ்சா மற்றும் செல்போன் போன்ற அனைத்து தடை செய்யப்பட்ட பொருட்களும் இரண்டாம் நிலை காவலர்கள் மூலம் கைதிகளுக்கு வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதேபோல, சிறைத்துறை நிர்வாகமே சிறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்களின் சட்டவிரோத நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, மத்திய சிறை கண்காணிப்பாளர் தகவல் பலகையில் அறிக்கையையும் வெளியிட்டிருந்தார்.
அதாவது, 2017-ம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்டு சிறையில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலை காவலர்கள் ஒரு சிலர் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற இதரப் பொருட்களை சிறைக்குள் கடத்துவதாகவும், தொடரும்பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலாக எழுத்து வடிவில் அறிவிப்பு பலகையில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று மாலை சுமார் 3.20 மணியில் இருந்து 4.50 மணி வரை கோவை மத்திய சிறையில் வெடிமருந்து தடுப்பு காவல் ஆய்வாளர்கள் மோகன் பிள்ளை, ராஜேஸ் ஆகியோர் தலைமையில் 31 காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது சிறையின் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதனால், சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.