திருப்பூரில் வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம் : ஆசிரியரைக் கண்டித்த மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் : திருப்பூரில் வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திருப்பூர் : திருப்பூரில் வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவின்போது ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. இதில், திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த பயிற்சி வகுப்பில் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாக்களித்த சின்னத்தைக் காட்டக்கூடிய விவிபேட் இயந்திரத்தினை கையாள்வது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

ஆசிரியரைக் கண்டித்த மாவட்ட ஆட்சியர் : 

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் வகுப்பறைக்குள் வந்திருந்த நிலையிலும், அவரை பொருட்படுத்தாமல் போனில் பேசிக்கொண்டிருந்த ஆசிரியரைக் கண்டித்தார். பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய நீங்களே இப்படி நடந்துகொள்ளலாமா..? எனக் கண்டிப்பு காட்டினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...