கோவையில் கழிவுநீர் வாகன ஓட்டிகளுக்கான பிரத்யேக மருத்துவ முகாம்

கோவை : கழிவுநீர் வாகன ஓட்டிகள் மற்றும் அதன் உதவியாளர்களுக்கான மருத்துவ முகாம் கோவை வடவள்ளியில் நடைபெற்றது.

கோவை : கழிவுநீர் வாகன ஓட்டிகள் மற்றும் அதன் உதவியாளர்களுக்கான மருத்துவ முகாம் கோவை வடவள்ளியில் நடைபெற்றது. 



தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரப் பணிகள் உறுதுணை திட்டத்தின் கீழ் ஈக்குவட்டாஸ் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் கற்பகம் அறக்கட்டளை மருத்துவமனை சார்பில் கடந்த 27-ம் தேதி இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், கற்பகம் அறக்கட்டளை மருத்துவமனையானது, பொது பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, காது, மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை வழங்கியது. பரிசோதனை முடிவில், பொது மருத்துவர் எலிசபெத் மற்றும் பிசியோதெரபிஸ்ட் துரை ஆகியோர் சிறப்பு மருத்துவ அறிவுரைகளை வழங்கினர். அதோடு, இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், இலவச மேல்சிகிச்சைக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் கற்பகம் அறக்கட்டளை மருத்துவமனைப் பரிந்துரைக்கப்பட்டது. 



"எங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்காணித்து கொள்ள இந்த மருத்துவ முகாம் பெரிதும் உதவியாக இருந்தது. நான் எங்களது சங்கம் முழுவதும் இந்த வார்த்தையைப் பகிர்ந்து கொள்வேன்," என்கிறார் அண்ணாமலை செப்டிக் டேங்க் கிளீனிங் சர்வீசஸின் உரிமையாளர் இமயவேல். 



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...