கோவை : 2019-2020-ம் ஆண்டுக்கான சி.ஐ.ஐ. தென்மண்டல தலைவராக சஞ்சய் ஜெயவர்த்தனவேலு தேர்வு செய்யப்பட்டார்.
கோவை : 2019-2020-ம் ஆண்டுக்கான சி.ஐ.ஐ. தென்மண்டல தலைவராக சஞ்சய் ஜெயவர்த்தனவேலு தேர்வு செய்யப்பட்டார்.
உலகளவில் டெக்ஸ்டைல்ஸ் துறைக்கான மெஷின்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கோவை லட்சுமி மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குநருமாக இருப்பவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு. இவர், 2018-19-ம் ஆண்டின் சி.ஐ.ஐ. தென்மண்டலத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். அதோடு, கடந்த 2006-07-ம் ஆண்டுகளில் சி.ஐ.ஐ. தமிழ்நாடு ஆணையத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். 2002-2004-ம் ஆண்டுகளில் சி.ஐ.ஐ. டெக்ஸ்டைல்ஸ் துணை குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்த நிலையில், சஞ்சய் ஜெயவர்த்தனவேலு 2019-2020-ம் ஆண்டுக்கான சி.ஐ.ஐ. தென்மண்டல தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த ரெட்டி'ஸ் லெபோரெட்டரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சதிஷ் ரெட்டி சி.ஐ.ஐ. தென்மண்டலத்தின் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, 2014 முதல் 2019 வரை சி.ஐ.ஐ.யின் மற்றும் சி.ஐ.ஐ.யின் தேசிய ஆணையத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். மேலும், 2003-04-ம் ஆண்டுகளில் சி.ஐ.ஐ.யின் தேசிய ஃபார்மா கமிட்டி மற்றும் சி.ஐ.ஐ. ஆந்திரப்பிரதேச மாநில ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
உலகளவில் டெக்ஸ்டைல்ஸ் துறைக்கான மெஷின்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கோவை லட்சுமி மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குநருமாக இருப்பவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு. இவர், 2018-19-ம் ஆண்டின் சி.ஐ.ஐ. தென்மண்டலத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். அதோடு, கடந்த 2006-07-ம் ஆண்டுகளில் சி.ஐ.ஐ. தமிழ்நாடு ஆணையத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். 2002-2004-ம் ஆண்டுகளில் சி.ஐ.ஐ. டெக்ஸ்டைல்ஸ் துணை குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்த நிலையில், சஞ்சய் ஜெயவர்த்தனவேலு 2019-2020-ம் ஆண்டுக்கான சி.ஐ.ஐ. தென்மண்டல தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த ரெட்டி'ஸ் லெபோரெட்டரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சதிஷ் ரெட்டி சி.ஐ.ஐ. தென்மண்டலத்தின் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, 2014 முதல் 2019 வரை சி.ஐ.ஐ.யின் மற்றும் சி.ஐ.ஐ.யின் தேசிய ஆணையத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். மேலும், 2003-04-ம் ஆண்டுகளில் சி.ஐ.ஐ.யின் தேசிய ஃபார்மா கமிட்டி மற்றும் சி.ஐ.ஐ. ஆந்திரப்பிரதேச மாநில ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.