நீலகிரி : உதகை எச்.பி.எப் பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயை, வனத்துறையினர் சுமார் ஒரு மணிநேர போராடி அணைத்தனர்.
நீலகிரி : உதகை எச்.பி.எப் பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயை, வனத்துறையினர் சுமார் ஒரு மணிநேர போராடி அணைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே போன்ற கோடை மாதங்களில் மழையின் அளவு குறைந்து, கடும் வெயில் சுட்டெரிக்கும். இச்சமயங்களில் வனப்பகுதிகளில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து கடும் வறட்சி நிலவும். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக, கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர் வனப்பகுதிகள் தீயில் கருகி வருகின்றன.
இந்த நிலையில், உதகையில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள எச்.பி.எப் வனப்பகுதியில் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பல ஏக்கர் பரப்பளவுடைய வனப்பகுதிகள் தீயில் கருகின. தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே போன்ற கோடை மாதங்களில் மழையின் அளவு குறைந்து, கடும் வெயில் சுட்டெரிக்கும். இச்சமயங்களில் வனப்பகுதிகளில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து கடும் வறட்சி நிலவும். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக, கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர் வனப்பகுதிகள் தீயில் கருகி வருகின்றன.
இந்த நிலையில், உதகையில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள எச்.பி.எப் வனப்பகுதியில் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பல ஏக்கர் பரப்பளவுடைய வனப்பகுதிகள் தீயில் கருகின. தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.