கோவையில் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே துணைக் கண்காணிப்பாளருக்கு பாராட்டு

கோவை : கோவையில் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே துணை கண்காணிப்பாளருக்கு வெகுமதி வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

கோவை : கோவையில் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே துணை கண்காணிப்பாளருக்கு வெகுமதி வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.



கோவை ரயில்நிலைய கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் விஜய் சிங் மீனா (35). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிளாட் பார்ம் 1-ல் பணியில் இருந்தார். அப்போது, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. அந்த ரயில் அங்கிருந்து கிளம்பும்போது, வயதான ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது, கால் தவறி விழுந்த அவர் ரயிலில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்த சக பயணிகள் கூச்சலிடவே, இதனைக் கவனித்த கண்காணிப்பாளர் விஜய் சிங் மீனா துரிதமாக செயல்பட்டு அவரை மீட்டார். 

இதனையடுத்து, அவருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் துரிதமாக செயல்பட்டு முதியவரின் உயிரைக் காப்பாற்றிய கண்காணிப்பாளர் விஜய் சிங் மீனாவிற்கு ரூ. 500 வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...