கோவை : கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் மகளிடம் சில்மிஷம் செய்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மருத்துவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை : கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் மகளிடம் சில்மிஷம் செய்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மருத்துவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை - அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை சிக்னல் அருகில் கவுதம் கிளினிக் உள்ளது. இந்த மருத்துவமனையை டாக்டர் ராமலிங்கம் (65) என்பவர் நடத்தி வருகிறார். இவர் இந்த மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சை நிபுணராகவும் உள்ளார். இந்த நிலையில், நேற்று இவரிடம் சிறுநீரக பாதிப்பிற்காக சிகிச்சை பெற நோயாளிகள் சிலர் வந்துள்ளனர். அதில், செல்வபுரத்தை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தன் தாயை சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, மகளின் உடல் பாகங்களை தொட்டு தாய்க்கு இந்த, இந்த இடத்தில் தானே வலி உள்ளது என்று கேட்டு சில்மிஷம் செய்துள்ளார். இதை சுதாரித்துக் கொண்ட அந்த இளம் பெண் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், சம்பவம் தொடர்பாக கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் சில்மிஷம் செய்த மருத்துவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.