கோவை : காவல்துறையும், நீதித்துறையும் கிரிமினலை காப்பாற்றும் செயலில் ஈடுபடுவதாக கோவை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டியக்கம் குற்றச்சாட்டியுள்ளது.
கோவை : காவல்துறையும், நீதித்துறையும் கிரிமினலை காப்பாற்றும் செயலில் ஈடுபடுவதாக கோவை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டியக்கம் குற்றச்சாட்டியுள்ளது.
கோவை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தற்போது செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர்கள் பேசியதாவது :- பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஊக்குவிக்கும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை உடனே பணி நீக்கம் செய்து தகுந்த சட்ட நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். வழக்கு போடுவதோடு அரசின் பணிகள் முடிவதில்லை. பாலியல் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு 8 நாட்களுக்குள் 5 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என சட்டம் உள்ளது. ஆனால், இது ஏதும் நடைமுறையில் இல்லை. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பொறுத்தவரை அந்தப் பகுதியைச் சேர்ந்த காவல்துறையை மாற்றாமல் உண்மை வெளிவராது. காவல்துறையும், நீதித்துறையும் கிரிமினலை காப்பாற்றும் செயலில் ஈடுபடுகின்றனர், என்றனர்.
இந்த சந்திப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மனித உரிமைப் போராளி ரத்தினம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கு .ராமகிருட்டிணன், தமிழர் அவைய பொறுப்பாளர் இளங்கோவன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் ச.பாலமுருகன், வழக்கறிஞர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தற்போது செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர்கள் பேசியதாவது :- பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஊக்குவிக்கும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை உடனே பணி நீக்கம் செய்து தகுந்த சட்ட நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். வழக்கு போடுவதோடு அரசின் பணிகள் முடிவதில்லை. பாலியல் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு 8 நாட்களுக்குள் 5 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என சட்டம் உள்ளது. ஆனால், இது ஏதும் நடைமுறையில் இல்லை. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பொறுத்தவரை அந்தப் பகுதியைச் சேர்ந்த காவல்துறையை மாற்றாமல் உண்மை வெளிவராது. காவல்துறையும், நீதித்துறையும் கிரிமினலை காப்பாற்றும் செயலில் ஈடுபடுகின்றனர், என்றனர்.
இந்த சந்திப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மனித உரிமைப் போராளி ரத்தினம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கு .ராமகிருட்டிணன், தமிழர் அவைய பொறுப்பாளர் இளங்கோவன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் ச.பாலமுருகன், வழக்கறிஞர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.