கோவை : பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும் என மாவட்ட கிறிஸ்துவசபையின் சார்பில் நடந்த சைபர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
கோவை : பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும் என மாவட்ட கிறிஸ்துவசபையின் சார்பில் நடந்த சைபர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
அண்மையில் பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களில் மூலமாக பெண்களை வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பத்தை தொடர்ந்து, மாவட்ட கிறிஸ்துவசபையின் சார்பில் சைபர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆண்கள், பெண்கள் என 400 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் தாக்குதல்களை தடுப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சபர் தாக்குதலில் இருந்து தங்கள எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து கோவை கிறிஸ்துவ சபையின் பிஷப் திமோதி ரவீந்தர் கூறுகையில், “பெண்கள் முன்னோக்கி வரவேண்டும். தங்களுக்கு நேரும் வன்கொடுமைகள் பற்றி வெளியே தைரியமாக தெரிவிக்க வேண்டும்,” என்றார்.
இதைத்தொடர்ந்து, சிறப்புரையாற்றிய காவல் ஆய்வாளர் ரூபி, பெண்கள் காவலன் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொண்டு, அவசர காலங்களில் அதனை பயன்படுத்த வேண்டும். இது போன்ற புகார்கள் வரும் போது, போலீசார் முன்னுரிமை கொடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிக்கு 10 நிமிடங்களில் விரைவார்கள், என அறிவுறித்தினார்.
அண்மையில் பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களில் மூலமாக பெண்களை வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பத்தை தொடர்ந்து, மாவட்ட கிறிஸ்துவசபையின் சார்பில் சைபர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆண்கள், பெண்கள் என 400 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் தாக்குதல்களை தடுப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சபர் தாக்குதலில் இருந்து தங்கள எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து கோவை கிறிஸ்துவ சபையின் பிஷப் திமோதி ரவீந்தர் கூறுகையில், “பெண்கள் முன்னோக்கி வரவேண்டும். தங்களுக்கு நேரும் வன்கொடுமைகள் பற்றி வெளியே தைரியமாக தெரிவிக்க வேண்டும்,” என்றார்.
இதைத்தொடர்ந்து, சிறப்புரையாற்றிய காவல் ஆய்வாளர் ரூபி, பெண்கள் காவலன் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொண்டு, அவசர காலங்களில் அதனை பயன்படுத்த வேண்டும். இது போன்ற புகார்கள் வரும் போது, போலீசார் முன்னுரிமை கொடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிக்கு 10 நிமிடங்களில் விரைவார்கள், என அறிவுறித்தினார்.