கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளின் வேட்பாளர்களும்..! சின்னங்களும்..!

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் காலியாக உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியலில் இன்று வெளியிடப்பட்டது. இதில், கோவை மக்களவை தொகுதியில் 14 வேட்பாளர்கள் மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் சின்னங்கள் வெளியிடப்பட்டது. கோவை மக்களவை தேர்தல் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளுக்கு அவர்களது சொந்த சின்னமே ஒதுக்கபட்டு உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கோவிந்தனுக்கு யானை சின்னமும், பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னமும், சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜனுக்கு சுத்தி அரிவாள் சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்டு உள்ள அரசியல் கட்சிகளான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாண சுந்தரத்திற்கு கரும்பு விவசாயி சின்னமும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரனுக்கு டார்ச் லைட் சின்னமும், தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் மணிகண்டனுக்கு மோதிரமும் வழங்கப்பட்டு உள்ளது. 

சுயேட்சை பட்டியலில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரைக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், கனகசபாபதி என்ற வேட்பாளருக்கு வைரம், கிருஷ்ணன் என்பவருக்கு தென்னம் தோப்பு, தனபால் என்பவருக்கு காலிபிளவர், நடராஜன் என்பவருக்கு கேஸ் சிலிண்டர், புஷ்பானந்தம் என்பவருக்கு தொலைக்காட்சி பெட்டி, பே. ராதாகிருஷ்ணனுக்கு பிஸ்கட், யு.ராதாகிருஷ்ணன் என்பவருக்கு புகைப்படக் கருவி சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதேபோல, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கணேசமூர்த்திக்கு யானை சின்னமும், தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்திற்கு உதயசூரியனும், அ.தி.மு.க. வேட்பாளர் சி. மகேந்திரனுக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சனுஜா, கரும்பு விவசாயி சின்னத்திலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை டார்ச் லைட் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

சுயேட்சை வேட்பாளர்களான அன்சாரிக்கு சீர்வளி சாதனமும், கே.என். சண்முகசுந்தரத்திற்குத் தொப்பியும், வி. சண்முகசுந்தரத்திற்கு வெண்டைக்காய், பாலாஜிக்கு ஊன்று கோலும், மாணிக்கவேலுக்கு கேஸ் சிலிண்டரும் ஒதுக்கப்பட்டு உள்ளது. சி.முத்துகுமார் என்பருக்கு பிரஷர் குக்கரும், அ.ம.மு.க. வேட்பாளரான சு. முத்துகுமாருக்கு பரிசு பெட்டகமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ராமசாமி என்பவருக்கு தொலைப்பேசியும், ராஜேந்திரன் என்பவருக்கு ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...