கோவை : நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் சுயேட்சைகளாகவே கருதப்படுவார்கள் என்ற நிலையில், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டுள்ள அ.ம.மு.க., வேட்பாளரின் பெயரைக் கொண்ட மற்றொரு சுயேட்சைக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கோவை : நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் சுயேட்சைகளாகவே கருதப்படுவார்கள் என்ற நிலையில், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டுள்ள அ.ம.மு.க., வேட்பாளரின் பெயரைக் கொண்ட மற்றொரு சுயேட்சைக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், கோவை மக்களவை தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெயரை கொண்ட இரண்டு சுயேட்சைகளும், சி.பி.எம். வேட்பாளர் நடராஜன் பெயரில் மற்றொரு சுயேட்சையும் போட்டியிடுகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அவர்களுக்கு சொந்தமான சின்னத்தில் போட்டியிடுகின்றனர். சுயேட்சைகளுக்கு வைரம், தென்னந்தோப்பு, காலிபிளவர், வாயு சிலிண்டர், தொலைக்காட்சி பெட்டி, பிஸ்கட் மற்றும் புகைப்படக் கருவி உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க., கேட்ட பிரஷர் குக்கர் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.
இதேபோல, பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில், அ.ம.மு.க. வேட்பாளர் சு. முத்துக்குமார் போட்டியிடும் நிலையில், சுயேட்சை வேட்பாளர் சி. முத்துக்குமார் என்பருக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அ.ம.மு.க., சுயேட்சை பட்டியலில் உள்ள நிலையில், அதே பெயரை கொண்ட மற்றொரு சுயேட்சைக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளர் பட்டியலில் அடுத்தடுத்து ஒரே பெயரை கொண்டவர்களுக்கு குக்கர் மற்றும் பரிசு பெட்டகம் கொண்ட சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், அ.ம.மு.க. வெற்றியை பறிக்கும் வகையில் திட்டமிட்டு சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அ.ம.மு.க.,வினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரம் பெயரைக் கொண்ட இரண்டு சுயேட்சைகளும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், கோவை மக்களவை தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெயரை கொண்ட இரண்டு சுயேட்சைகளும், சி.பி.எம். வேட்பாளர் நடராஜன் பெயரில் மற்றொரு சுயேட்சையும் போட்டியிடுகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அவர்களுக்கு சொந்தமான சின்னத்தில் போட்டியிடுகின்றனர். சுயேட்சைகளுக்கு வைரம், தென்னந்தோப்பு, காலிபிளவர், வாயு சிலிண்டர், தொலைக்காட்சி பெட்டி, பிஸ்கட் மற்றும் புகைப்படக் கருவி உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க., கேட்ட பிரஷர் குக்கர் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.
இதேபோல, பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில், அ.ம.மு.க. வேட்பாளர் சு. முத்துக்குமார் போட்டியிடும் நிலையில், சுயேட்சை வேட்பாளர் சி. முத்துக்குமார் என்பருக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அ.ம.மு.க., சுயேட்சை பட்டியலில் உள்ள நிலையில், அதே பெயரை கொண்ட மற்றொரு சுயேட்சைக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளர் பட்டியலில் அடுத்தடுத்து ஒரே பெயரை கொண்டவர்களுக்கு குக்கர் மற்றும் பரிசு பெட்டகம் கொண்ட சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், அ.ம.மு.க. வெற்றியை பறிக்கும் வகையில் திட்டமிட்டு சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அ.ம.மு.க.,வினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரம் பெயரைக் கொண்ட இரண்டு சுயேட்சைகளும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.