சிறுமி கொலை விவகாரம் : கோவை எஸ்.பி.யுடன் கமல்ஹாசன் சந்திப்பு

கோவை : சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை : சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களை ஓரம் கட்டிவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட கோவையைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அந்தக் குடும்பத்திற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தருவதாக அவர் உறுதியளித்தார். 



இதைத் தொடர்ந்து, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, பாலியல் வன்கொடுமையால் சிறுமியை இழந்த குடும்பத்திற்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். 

மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் விபரங்களை வெளியிட்டால் மக்களிடம் எஸ்.பி. பாண்டியராஜன் நன்பெயரை இழந்துள்ளார். எனவே, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்வதன் மூலம் மக்களிடம் மீண்டும் நன்மதிப்பை பெற முடியும் என கமல்ஹாசன் அறிவுறுத்தினார். 

பின்னர், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டனை பெற்றுத் தருவது தனது கடமை என்றும், குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கமல்ஹாசனிடம் எஸ்.பி. பாண்டியராஜன் உறுதியளித்துள்ளார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...