திருப்பூர் : வேட்பு மனு பரிசீலனையில் பாரபட்சம் காட்டப்பட்டதாகக் கூறி, வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட முன்னாள் விமானப் படை வீரர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : வேட்பு மனு பரிசீலனையில் பாரபட்சம் காட்டப்பட்டதாகக் கூறி, வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட முன்னாள் விமானப் படை வீரர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக கார்கில் போராளியும், முன்னாள் விமானப் படை வீரருமான அந்தியூரை பூர்வீகமாக கொண்ட செல்வராமலிங்கம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 27-ம் தேதி பரிசீலனைக்கு 11 மணிக்கு திருத்தம் செய்து தரவேண்டும் என அறிவித்திருந்தனர். காலை 10.30 மணிக்கே தான் வந்த போதும், அதிகாரிகள் இல்லாததால் திருத்தம் செய்து தரமுடியாமல் போனது. 11 மணிக்கு தொடங்குவதாக அறிவித்திருந்த பரிசீலனை கூட்டம் 12 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கிய உடனே உள்நோக்கத்துடனே தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே, இது குறித்து தமிழக தேர்தல் ஆணையத்தில் மின் அஞ்சல் மூலமாக புகார் செய்துள்ளேன், எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்து தனி ஒருவராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் விமானப் படை வீரர் செல்வராமலிங்கம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தூத்துக்குடியில் கனிமொழி மற்றும் தமிழிசை வேட்புமனுக்கள் நேரமெடுத்து பெறப்படும் போது, எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், எனது வேட்புமனுவை நிராகரித்தால், அவர்களது வேட்புமனுக்களையும் நிராகரிக்க வேண்டும் அல்லது எனது வேட்புமனுவை ஏற்க வேண்டும் என அவர் கூறினார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக கார்கில் போராளியும், முன்னாள் விமானப் படை வீரருமான அந்தியூரை பூர்வீகமாக கொண்ட செல்வராமலிங்கம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 27-ம் தேதி பரிசீலனைக்கு 11 மணிக்கு திருத்தம் செய்து தரவேண்டும் என அறிவித்திருந்தனர். காலை 10.30 மணிக்கே தான் வந்த போதும், அதிகாரிகள் இல்லாததால் திருத்தம் செய்து தரமுடியாமல் போனது. 11 மணிக்கு தொடங்குவதாக அறிவித்திருந்த பரிசீலனை கூட்டம் 12 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கிய உடனே உள்நோக்கத்துடனே தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே, இது குறித்து தமிழக தேர்தல் ஆணையத்தில் மின் அஞ்சல் மூலமாக புகார் செய்துள்ளேன், எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்து தனி ஒருவராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் விமானப் படை வீரர் செல்வராமலிங்கம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தூத்துக்குடியில் கனிமொழி மற்றும் தமிழிசை வேட்புமனுக்கள் நேரமெடுத்து பெறப்படும் போது, எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், எனது வேட்புமனுவை நிராகரித்தால், அவர்களது வேட்புமனுக்களையும் நிராகரிக்க வேண்டும் அல்லது எனது வேட்புமனுவை ஏற்க வேண்டும் என அவர் கூறினார்.