நிர்பயா நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்க மாதர் சங்கம் கோரிக்கை

கோவை : கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு, நிர்பயா நிவாரண நிதியில் இருந்து நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


கோவை : கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு, நிர்பயா நிவாரண நிதியில் இருந்து நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 

கோவை பன்னிமடை கஸ்தூரி நாய்க்கன்புதூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சம்பவம் நடைபெற்று 4 நாட்கள் ஆன நிலையில், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாததால், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.



இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர் ராதிகா பேசியதாவது :- மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியின் பேரில், குழந்தையின் சடலத்தை அன்று பெற்றுக் கொண்டோம். ஒரு சிறிய கிராமப் பகுதியில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் என்ன சிரமம் உள்ளது..?. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பதால், விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்துள்ளோம். 

மேலும், மத்திய அரசின் நிர்பயா நிதியில் இருந்து உடனடியாக பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிட வேண்டும். அரசு சார்பில் இலவச வீடு மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டும் என கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். நிர்வாக ரீதியான சில காரணங்களால் உடனடியாக சில விஷயங்களை செய்ய முடியாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆனால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவாதம் அளித்தார். நடவடிக்கைகள் இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம், என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...