தங்கம் மற்றும் வெள்ளியில் கட்சியின் சின்னங்களை வடிவமைத்த கோவை நகை பட்டறை தொழிலாளி

கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயக கடமையை நேர்மையாக செயல்படுத்த வலியுறுத்தி, தங்கம் மற்றும் வெள்ளியில் கட்சி சின்னங்களையும், நடுநிலை வாக்காளனின் மனநிலை சிற்பத்தையும் கோவை தங்க நகைப் பட்டறை தொழிலாளி யு.எம்.டி.ராஜா வடிவமைத்துள்ளார்.



கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயக கடமையை நேர்மையாக செயல்படுத்த வலியுறுத்தி, தங்கம் மற்றும் வெள்ளியில் கட்சி சின்னங்களையும், நடுநிலை வாக்காளனின் மனநிலை சிற்பத்தையும் கோவை தங்க நகைப் பட்டறை தொழிலாளி யு.எம்.டி.ராஜா வடிவமைத்துள்ளார். 

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகைப் பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா, அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர். உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார். 



இந்த நிலையில், தற்போது, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி 300 மி.கிராம் தங்கத்தைப் பயன்படுத்தி கட்சி சின்னங்களை ஒரு இன்ச் அளவில் உருவாக்கி உள்ளார். இதில், கை சின்னம், தாமரை, உதயசூரியன், சுத்தி அரிவாள், இரட்டை இலை ஆகியவற்றை செய்து உள்ளார். இதேபோல், காம்பஸில் பென்சிலை கொண்டு ஒரு வாக்காளர் வாக்களித்து விட்டு, 'நடுநிலையாக வாக்களிப்போம், உண்மையை நிலை நாட்டுவோம்,' என்பதை வெளிப்படுத்தும் வகையிலும், ஓட்டு அளித்ததற்கு அடையாளமாக விரலில் மை வைக்கப்பட்டதை உயரத்தி காட்டி, 'எனது வாக்கு எனது எதிர்காலம்' என்பதை விளக்கும் விதமாக அமைத்து இருந்தார். 



"ஒரு கிராம் வெள்ளியில் 18 சின்னங்கள் பென்சில் பாக்சில் பதிய செய்து 100% வாக்குப்பதிய செய்து, வரும் ஏப்ரல் 18-ம் தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி இதனை செய்துள்ளேன். இதற்கு இரண்டு நாட்கள் ஆகியது," என்றார் தங்க நகைப் பட்டறை தொழிலாளி யு.எம்.டி.ராஜா.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...