கோவை : பத்திரிக்கையாளரிடம் இருந்த மைக்கை இரவல் வாங்கிய த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜ், செய்தித்தாள்களுக்கு புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்த சம்பவம் செய்தியாளர்களிடம் இடையே நகைப்பை ஏற்படுத்தியது.
கோவை : பத்திரிக்கையாளரிடம் இருந்த மைக்கை இரவல் வாங்கிய த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜ், செய்தித்தாள்களுக்கு புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்த சம்பவம் செய்தியாளர்களிடம் இடையே நகைப்பை ஏற்படுத்தியது.
கோவை ஆடிஸ் வீதியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். இதையடுத்து செய்திதாள்களுக்கு புகைப்படம் எடுக்க போஸ் கொடுக்க சொல்லி, புகைப்பட கலைஞர்கள் கூறினார். தொடர்ந்து, மைக்கில் பேசுவது போல போஸ் கொடுக்க நினைத்தார் யுவராஜ்.
ஆனால், கட்சி அலுவலகத்தில் மைக் இல்லாததால், செய்தியாளர் ஒருவரிடம் இருந்து மைக்கினை கேட்டார். பின்னர், லோகோவை கழற்றி விட்டு கொடுத்த டம்மி மைக்கில் உரையாற்றுவது போல, போஸ் கொடுத்தார். அது டம்மி மைக் என தெரியாதவாறு, போட்டகிராபர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். பின்னர் நன்றி கூறிவிட்டு, மைக்கினை யுவராஜ் செய்தியாளரிடம் திரும்பக் கொடுத்தார்.