கோவை : பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிக அளவில் ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளாவதாக ஆட்டிசம் அண்டு பியாண்ட் அமைப்பின் நிறுவனர் தீபா மாலினி தெரிவித்தார்.
கோவை : பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிக அளவில் ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளாவதாக ஆட்டிசம் அண்டு பியாண்ட் அமைப்பின் நிறுவனர் தீபா மாலினி தெரிவித்தார்.
ஆண்டுதோறும் உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் 2-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தையொட்டி, ஆட்டிசம் அண்டு பியாண்ட் அமைப்பின் நிறுவனர் தீபா மாலினியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 2018-ன் ஆய்வின்படி, 59 பேரில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் நோய் பாதிப்பு இருக்கிறது. உலகம் முழுவதும் 70 மில்லியன் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சினை தொடர்பாக தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இளம்பருவம் முதலே பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்ற முடியும். இதற்கு, பிளோர் டைம் பயிற்சி மூலம் கவனிக்கும் திறனை அதிகரிக்க முடியும். இதன்மூலம், சுயமாக சிந்திக்கும் திறன், விளையாட்டு திறன், மொழித்திறன் மற்றவர்களுடன் இவர்கள் எளிதில் ஒருங்கிணைய இப்பயிற்சி உதவிகரமாக இருக்கும். பெரும்பாலான குழந்தைகள் சிந்திக்கும் திறன் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
கனடாவில் வார இறுதி நாட்களில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதால், அவர்களின் குழந்தைகளுடனான தொடர்பு அதிகரித்து உள்ளது. இதனை தங்கள் அமைப்பு செயல்படுத்தி ஆட்டிசம் குழந்தைகளின் மேம்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் நான்கில் ஒரு பங்கு என அதிகளவில் ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர், என்றார்.
ஆண்டுதோறும் உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் 2-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தையொட்டி, ஆட்டிசம் அண்டு பியாண்ட் அமைப்பின் நிறுவனர் தீபா மாலினியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 2018-ன் ஆய்வின்படி, 59 பேரில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் நோய் பாதிப்பு இருக்கிறது. உலகம் முழுவதும் 70 மில்லியன் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சினை தொடர்பாக தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இளம்பருவம் முதலே பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்ற முடியும். இதற்கு, பிளோர் டைம் பயிற்சி மூலம் கவனிக்கும் திறனை அதிகரிக்க முடியும். இதன்மூலம், சுயமாக சிந்திக்கும் திறன், விளையாட்டு திறன், மொழித்திறன் மற்றவர்களுடன் இவர்கள் எளிதில் ஒருங்கிணைய இப்பயிற்சி உதவிகரமாக இருக்கும். பெரும்பாலான குழந்தைகள் சிந்திக்கும் திறன் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
கனடாவில் வார இறுதி நாட்களில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதால், அவர்களின் குழந்தைகளுடனான தொடர்பு அதிகரித்து உள்ளது. இதனை தங்கள் அமைப்பு செயல்படுத்தி ஆட்டிசம் குழந்தைகளின் மேம்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் நான்கில் ஒரு பங்கு என அதிகளவில் ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர், என்றார்.