மேட்டுப்பாளையத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 மணல் லாரிகள் பறிமுதல்

கோவை : மேட்டுப்பாளையத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 5 மணல் லாரிகளை மடக்கிப்பிடித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 5 மணல் லாரிகளை மடக்கிப்பிடித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தார்ப்பாய் மூடிய நிலையில், ஐந்து லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வருவதை கண்ட போலீசார், சந்தேகமடைந்து அவற்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், லாரி நிறைய ஆற்று மணல் இருந்ததையும், இதற்கான எவ்வித முறையான ஆவணங்கள் அதன் ஓட்டுனர்களிடம் இல்லாதையும் கண்டனர். 

ஏற்கனவே, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ள சந்தையில் மணல் விற்கப்பட்டு வருவது குறித்தும், இவை கரூர் காவிரி ஆற்றில் இருந்து முறைகேடாக அள்ளி வந்து ரகசியமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் புகார்கள் வந்த நிலையில், இந்த லாரிகள் பிடிபட்டுள்ளன. பிடிபட்ட லாரிகளை மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். காவிரியாற்று மணலை கடத்தி வந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள ரகசிய இடங்களில் பதுக்கி வைத்து, பின்னர் இவை யூனிட் ஒன்று ரூ. 15,000 வரை கள்ள விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த மணல் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்ட வருவாய்துறையினர், பிடிபட்ட மணல் லாரிகள் மீது சட்டவிரோத மணல் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...