கோவை : கோவையில் சிறுமி மரணம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஆதிதிராவிடர் நலத்துறை உறுப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை : கோவையில் சிறுமி மரணம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஆதிதிராவிடர் நலத்துறை உறுப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
பன்னிமடை பகுதியைச் சேர்ந்த சிறுமி தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா மற்றும் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், தற்போது இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிறுமி மரணம் தொடர்பாக கொலை மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுமியின் மரணம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டம் 2016-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தால்தான், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும். அதேபோல, சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை, அரசின் சார்பில் இழப்பீடு ஆகியவை கிடைக்கும் என வலியுறுத்தி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் மாநில உறுப்பினர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இந்த கோரிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பரிசீலிப்பதாக அவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.
பன்னிமடை பகுதியைச் சேர்ந்த சிறுமி தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா மற்றும் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், தற்போது இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிறுமி மரணம் தொடர்பாக கொலை மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுமியின் மரணம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டம் 2016-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தால்தான், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும். அதேபோல, சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை, அரசின் சார்பில் இழப்பீடு ஆகியவை கிடைக்கும் என வலியுறுத்தி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் மாநில உறுப்பினர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இந்த கோரிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பரிசீலிப்பதாக அவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.