பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க கமல் இன்று கோவை வருகை

கோவை : தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்துவிட்டு, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவை வருகிறார்.

கோவை : தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்துவிட்டு, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவை வருகிறார்.

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய மற்றும் வடசென்னை பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள கமல் முடிவு செய்திருந்தார். ஆனால், அந்தப் பிரச்சாரங்களை ரத்து செய்துவிட்டு இன்று கோவை வருகிறார். சுமார், 2 மணியளவில் கோவை விமான நிலையம் வரும் அவருடன், சிறந்த வழக்கறிஞர்களும் வர இருப்பதாக கூறப்படுகிறது. 

முன்னதாக, கோவையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு சட்டரீதியான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் செய்து தரும் என அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...