அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நதிநீர் இணைப்பு சாத்தியமாகும் : கோவையில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிரேமலதா உறுதி

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நதிநீர் இணைப்பு சாத்தியமாகும் என்றும், இதனால் விவசாயிகள் பயன்பெற முடியும் என கோவையில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ஆரை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிரேமலதா தெரிவித்தார்.


அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நதிநீர் இணைப்பு சாத்தியமாகும் என்றும், இதனால் விவசாயிகள் பயன்பெற முடியும் என கோவையில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ஆரை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிரேமலதா தெரிவித்தார்.



கோவை கணபதியில் கூட்டணி கட்சியான பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- ஜி.எஸ்.டி. பற்றி கவலைப்பட வேண்டாம். நமது எம்.பி.க்கள் டெல்லி சென்று ஜி.ஸ்.டி.யை மறுபரிசீலனை செய்வார்கள். தி.மு.க. டெபாசிட்டை இழந்து, பா.ஜ.க. வேட்பாளர் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி. ஏனெனில், செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்கி, விண்வெளித்துறையில் இதியாவிற்கு தனி இடத்தை உருவக்கிக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. அனைவருக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நன்கு தெரியும். அதுபோல, கோவை மக்கள் சி.பி.ஆரை நன்கு அறிவார்கள். சி.பி.ஆரின் வெற்றி மாநிலத்தில் ஆகும் கட்சிக்கான வெற்றி. மத்தியில் ஆளும் பிரதமர் மோடிக்கான வெற்றி.



40 தொகுதிகளிலும் எங்களது கூட்டணி வெற்றி பெற்றால், நதிகள் இணைப்பு சாத்தியமாகும். இது நமது விவசாயிகளுக்கு அத்தியாவசியமானது. மோடி தலைமையில் ஊழல் இல்லாத ஆட்சி அமைக்கப்படும். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் அதீத ஊழல் மிகுந்த கட்சிகளாகும். மேலும், நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் மாற்றப்படும். சி.பி.ஆரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்களா...?, என ஜெயலலிதா பாணியில் அவர் மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், அனைத்து கருத்துக் கணிப்புகளும் பிரதமர் மோடிதான் மீண்டும் வெற்றி பெறுவார் என தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கூட்டணி இதுவரை பிரதமர் வேட்பாளரின் பெயர் கூட அறிவிக்கவில்லை. பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மலைக்கும், மடுவுக்கும் இருக்கும் வித்தியாசமாகும். சி.பி.ஆரின் முகத்தில் மோடி, எம்.ஜி.ஆர்., அம்மா, கேப்டன் ஆகியோரின் முகங்களை நம்மால் பார்க்க முடிகிறது, எனவும் அவர் தெரிவித்தார்.

இறுதியில், புல்வாமா தாக்குதலின் பதில் தாக்கு என்பதற்கு பதிலாக, புல்வாமா தாக்குதல் பிரதமர் மோடியின் தைரியத்தால் மேற்கொள்ளப்பட்டதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...