திருப்பூர்: பல்லடம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வங்கிப் பணம் ரூ. 10 கோடி, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, திரும்ப வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர்: பல்லடம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வங்கிப் பணம் ரூ. 10 கோடி, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, திரும்ப வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் இருந்தவர்கள் தங்கள் வங்கி ஊழியர்கள் என்றும், வங்கிக்கு பணம் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர்களிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்தபோது, அதில் கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகள் ரூ. 25,000மும், 500 ரூபாய் நோட்டுகள் ரூ. 88,000-மும், 100 ரூபாய் நோட்டுகள் ரூ. 40,000மும், 50 ரூபாய் நோட்டுகள் ரூ. 40,000-ம் என 10 கோடி ரூபாய் பணம் புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் கொண்டு செல்லப்படுவதாக முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தை தூத்துக்குடி மாவட்டம் என குறிப்பிடப்பட்டு இருந்ததால், ஆவணங்கள் போலியாக இருக்கலாம் என சந்தேகித்த பறக்கும் படையினர், வாகனத்துடன் 10 கோடி ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து பல்லடம் வட்டாட்சியர் சாந்தியிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பணம் பறிமுதல் செய்யப்பட்ட தகவலறிந்த வங்கி அதிகாரிகளும், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆவணங்களை கொண்டு வந்து சமர்ப்பித்தனர். விரைந்து வந்த வருமானவரித் துறை அதிகாரிகள் 9 மணி நேர சோதனைக்குப் பிறகு, பிடிக்கப்பட்ட பணம் மெர்கன்டைல் வங்கிக்கு சொந்தமானது என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை என்ற ஊர் அதிக அளவில் அறியப்படாததால் ஏற்பட்ட குளறுபடி என்றும் தெரியவந்தது. இதனையடுத்து, வங்கி அதிகாரிகளிடம் 10 கோடி ரூபாய் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் 10 கோடி ரூபாய் கோவை கிளைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டையை புதுக்கோட்டை மாவட்டம் என தவறாக புரிந்து கொண்டதால், 10 கோடி ரூபாய் வங்கி பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் இருந்தவர்கள் தங்கள் வங்கி ஊழியர்கள் என்றும், வங்கிக்கு பணம் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர்களிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்தபோது, அதில் கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகள் ரூ. 25,000மும், 500 ரூபாய் நோட்டுகள் ரூ. 88,000-மும், 100 ரூபாய் நோட்டுகள் ரூ. 40,000மும், 50 ரூபாய் நோட்டுகள் ரூ. 40,000-ம் என 10 கோடி ரூபாய் பணம் புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் கொண்டு செல்லப்படுவதாக முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தை தூத்துக்குடி மாவட்டம் என குறிப்பிடப்பட்டு இருந்ததால், ஆவணங்கள் போலியாக இருக்கலாம் என சந்தேகித்த பறக்கும் படையினர், வாகனத்துடன் 10 கோடி ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து பல்லடம் வட்டாட்சியர் சாந்தியிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பணம் பறிமுதல் செய்யப்பட்ட தகவலறிந்த வங்கி அதிகாரிகளும், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆவணங்களை கொண்டு வந்து சமர்ப்பித்தனர். விரைந்து வந்த வருமானவரித் துறை அதிகாரிகள் 9 மணி நேர சோதனைக்குப் பிறகு, பிடிக்கப்பட்ட பணம் மெர்கன்டைல் வங்கிக்கு சொந்தமானது என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை என்ற ஊர் அதிக அளவில் அறியப்படாததால் ஏற்பட்ட குளறுபடி என்றும் தெரியவந்தது. இதனையடுத்து, வங்கி அதிகாரிகளிடம் 10 கோடி ரூபாய் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் 10 கோடி ரூபாய் கோவை கிளைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டையை புதுக்கோட்டை மாவட்டம் என தவறாக புரிந்து கொண்டதால், 10 கோடி ரூபாய் வங்கி பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.