வனத்துறை பணியிடங்களுக்கான தேர்வு வெளிப்படையாக நடக்கிறது : தமிழக வனத்துறை செயலாளர்

கோவை : வனத்துறையில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு, எந்தவித அரசியல் தலையீடுமின்றி வெளிப்படையாக நடைபெற்று வருவதாக வனத்துறை தலைமை செயலாளர் ஷாம்பு கல்லோலிகர் தெரிவித்தார்.

கோவை : வனத்துறையில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு, எந்தவித அரசியல் தலையீடுமின்றி வெளிப்படையாக நடைபெற்று வருவதாக வனத்துறை தலைமை செயலாளர் ஷாம்பு கல்லோலிகர் தெரிவித்தார்.

குரும்பபாளையத்தில் உள்ள ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியில் வன பாதுகாவர் பணிக்கான 6 மாத பயிற்சி வகுப்பை தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தலைமை செயலர் ஷாம்பு கல்லோலிகர் தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- வனத்துறையில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறுவதால், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் தலையீடு தடுக்கப்பட்டுள்ளது. வனப் பாதுகாவலர் பணிக்கு ப்ளஸ்2 கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதில், 638 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 40 சதவீதம் பேர் என்ஜினியரிங் மாணவர்களும், 10 சதவீதம் முதுகலை மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். 160 வருட பழமையான துறையான வனத்துறையில், வனப்பாதுகாவலர் பணியானது அர்ப்பணிப்பு மற்றும் முழு ஈடுபாடுடன் கூடியதாகும், என்றார்.

முன்னதாக, தலைமை வனப்பாதுகாவலர் எச். மல்லேஷப்பா பேசுகையில், “இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் வேறு மாநிலத்தவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இது தொடர்பான வனத்துறை அனுப்பிய பரிந்துரைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இது தமிழகத்தில் பணியாற்றுபவர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்,” என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...