கோவையில் தொடங்கியது அனல் பறக்கும் பிரச்சாரம் : முக்கிய கட்சிகள் உள்பட அனைத்து வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட சுயேட்சைகளும் தங்களது பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.


கோவை : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட சுயேட்சைகளும் தங்களது பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். 



புகைப்படம் : பொள்ளாச்சி தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்தை வரவேற்கும் பெண்

தமிழகத்திற்கு 2-வது கட்டமாக வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு பரிசீலனை இன்று முடிவடைந்த நிலையில், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட சுயேட்சைகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதனால், கோவை மாவட்டத்தில் தேர்தல் ஜூரம் தொற்றிக் கொண்டது. 

பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், கோவை மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், வீடு வீடாகச் சென்றும், பொது இடங்களிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என வாக்காளர்கள் குழம்பி நிற்கும் வேளையில், பல்வேறு இடங்களில் கூட்டங்களைக் கூட்டி, தனது அனுபவ பேச்சுக்களினாலும், வாக்குறுதிகளினாலும் வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். 



புகைப்படம் : ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு வருபவர்களிடம் வாக்கு சேகரிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மகேந்திரன். 

இதனிடையே, தேர்தல் விதிகளுக்குட்பட்டு அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனவா...? என தேர்தல் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...