கோவை : 7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கலாம் எனவும், உடற்கூறாய்வு அறிக்கை நாளை கிடைக்க வாய்ப்பிருப்பதாக மாநில குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் மோகன் தெரிவித்துள்ளார்.
கோவை : 7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கலாம் எனவும், உடற்கூறாய்வு அறிக்கை நாளை கிடைக்க வாய்ப்பிருப்பதாக மாநில குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் மோகன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினர், பள்ளி ஆசிரியர்கள், ஊர்மக்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கை நாளை வர வாய்ப்பிருக்கிறது. முழு விபரம் தெரிய வந்த பின்னர், அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்திருக்க வாய்ப்புள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
மேலும், இதற்கு முன்னர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்க வாய்ப்பில்லை. உள்ளுர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர்வாசிகளிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகள் காவல் துறையினர் ஏற்கனவே பிடித்து விசாரணை நடத்தும் நபர்களாகவும் இருக்கலாம். வேறு நபர்களாகவும் இருக்கலாம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ சிறுமியின் பெயர், புகைப்படம் வெளியிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக குழந்தைகள் நல ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும், என தெரிவித்தார்.