கோவை : காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் விரிவாக்க கல்வித்துறை சார்பாக மத்திய சிறையில் கைதிகள் கணினி அறிவினை வளர்த்துக் கொள்ளும் விதமாக, கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டது.
கோவை : காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் விரிவாக்க கல்வித்துறை சார்பாக மத்திய சிறையில் கைதிகள் கணினி அறிவினை வளர்த்துக் கொள்ளும் விதமாக, கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மகாத்மா காந்தியடிகளின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு காருண்யா பல்கலைக்கழக அவுட்ரிச் கிளப் மாணவர்கள் சார்பில் சிறைக் கைதிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது, கணினி அறிவை வளர்த்துக் கொள்ள ஆய்வகம் தேவை என சிறைக் கைதிகள் விரும்பினர். அதனை ஏற்று, காருண்யா பல்கலைக்கழகம் சார்பில் ஒரு கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதன் திறப்பு நேற்று நடைபெற்றது.

இதில், காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, வரும் நாட்களில் காருண்யா பல்கலை சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் கணினி சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும், என்றார். பின்னர், கணினி மற்றும் பல்வேறு அறிவுரை புத்தகங்களையும், 50 இருக்கைகளையும் அவர் வழங்கினார்.

கடந்த ஆண்டு மகாத்மா காந்தியடிகளின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு காருண்யா பல்கலைக்கழக அவுட்ரிச் கிளப் மாணவர்கள் சார்பில் சிறைக் கைதிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது, கணினி அறிவை வளர்த்துக் கொள்ள ஆய்வகம் தேவை என சிறைக் கைதிகள் விரும்பினர். அதனை ஏற்று, காருண்யா பல்கலைக்கழகம் சார்பில் ஒரு கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதன் திறப்பு நேற்று நடைபெற்றது.

இதில், காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, வரும் நாட்களில் காருண்யா பல்கலை சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் கணினி சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும், என்றார். பின்னர், கணினி மற்றும் பல்வேறு அறிவுரை புத்தகங்களையும், 50 இருக்கைகளையும் அவர் வழங்கினார்.