கோவை : கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றனர்.
கோவை : கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றனர்.
17-வது நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதோடு, காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர்கள் குறித்த தகவலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 38 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். தகுதியின் அடிப்படையில் 15 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதேபோல, பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் 41 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தகுதியின் அடிப்படையில் 17 பேருடைய மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர் ராமலிங்கம் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதேபோல, பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு.மனு தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர் சுகுமார், தனது மனுவை திரும்பப் பெற்றார்.
17-வது நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதோடு, காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர்கள் குறித்த தகவலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 38 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். தகுதியின் அடிப்படையில் 15 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதேபோல, பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் 41 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தகுதியின் அடிப்படையில் 17 பேருடைய மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர் ராமலிங்கம் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதேபோல, பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு.மனு தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர் சுகுமார், தனது மனுவை திரும்பப் பெற்றார்.