கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ அணைக்கும் பணிகளைத் தொடர்ந்து, புகைமூட்டம் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி ஆய்வு செய்தார்.
கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ அணைக்கும் பணிகளைத் தொடர்ந்து, புகைமூட்டம் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 23) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. இதைத் தொடர்ந்து, 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் வாகனங்களுடன் தீ அணைக்கப்பட்டது. மேலும், வெப்ப அழுத்தத்தால் புகை மூட்டம் அதிகமானதால், குப்பைக்கிடங்கின் பாதிப்பினை சூலூர் விமானப்படையினைச் சேர்ந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தி தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ அணைக்கும் பணிகளைத் தொடர்ந்து, புகைமூட்டம் ஏற்படாமல் இருக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ச. பிரசன்னா ராமசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ். சினேகா ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 23) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. இதைத் தொடர்ந்து, 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் வாகனங்களுடன் தீ அணைக்கப்பட்டது. மேலும், வெப்ப அழுத்தத்தால் புகை மூட்டம் அதிகமானதால், குப்பைக்கிடங்கின் பாதிப்பினை சூலூர் விமானப்படையினைச் சேர்ந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தி தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ அணைக்கும் பணிகளைத் தொடர்ந்து, புகைமூட்டம் ஏற்படாமல் இருக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ச. பிரசன்னா ராமசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ். சினேகா ஆகியோர் உடனிருந்தனர்.