கோவை : பா.ஜ.க., ஆட்சியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ரபேல் விமான ஊழலை சுட்டிக்காட்டும் விதமாக விமான வடிவமைப்புள்ள பரப்புரை வாகனத்தில் தி.மு.க. கூட்டணியின் சி.பி.எம். பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
கோவை : பா.ஜ.க., ஆட்சியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ரபேல் விமான ஊழலை சுட்டிக்காட்டும் விதமாக விமான வடிவமைப்புள்ள பரப்புரை வாகனத்தில் தி.மு.க. கூட்டணியின் சி.பி.எம். பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
17-வது நாடாளுமன்ற தேர்தல் 2-வது கட்டமாக வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பிரதான கட்சிகள் உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்பு மனு அளித்திருந்தனர். வேட்பு மனுக்கள் இன்றும், நாளையும் வாபஸ் பெற தேர்தல் ஆணையம் இரண்டு நாட்களை ஒதுக்கியுள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பரப்புரையை தொடங்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க., கூட்டணி கட்சியின் சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் நேற்று தனது பிரச்சாரத்தை விமான வடிவிலான வாகனத்தில் தொடங்கினார். பா.ஜ.க.,வின் ரபேல் விமான ஊழலை எளியவரும் புரிந்துகொண்டு, சுத்தி அரிவாள் நட்சத்திர சின்னத்தில் வாக்களிக்க செய்ய வேண்டுமென்பதற்காக விமான வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, இரண்டாவது நாளாக தெப்பகுள மைதானம், மரக்கடை, லிங்கப்ப செட்டி வீதி, தியாகராய புது வீதி உள்ளிட்ட இடங்களில் வாக்குசேகரிப்பு மேற்கொண்டார். அப்போது, பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரியால், பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டது. கோவையில் இருந்த மத்திய அரசு நிறுவனங்கள் மூடப்பட்டது. வேலை வாய்ப்பின்மைதான் மத்திய அரசின் சாதனைகள் என குற்றம்சாட்டிய பி.ஆர் நடராஜன், மூடப்பட்ட தொழிற்கூடங்களை திறக்கவும், ஜி.எஸ்.டி. வரியை குறைக்கவும் நடவடிக்கை எடுப்போம், என வாக்குறுதி அளித்தார்.
17-வது நாடாளுமன்ற தேர்தல் 2-வது கட்டமாக வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பிரதான கட்சிகள் உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்பு மனு அளித்திருந்தனர். வேட்பு மனுக்கள் இன்றும், நாளையும் வாபஸ் பெற தேர்தல் ஆணையம் இரண்டு நாட்களை ஒதுக்கியுள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பரப்புரையை தொடங்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க., கூட்டணி கட்சியின் சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் நேற்று தனது பிரச்சாரத்தை விமான வடிவிலான வாகனத்தில் தொடங்கினார். பா.ஜ.க.,வின் ரபேல் விமான ஊழலை எளியவரும் புரிந்துகொண்டு, சுத்தி அரிவாள் நட்சத்திர சின்னத்தில் வாக்களிக்க செய்ய வேண்டுமென்பதற்காக விமான வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, இரண்டாவது நாளாக தெப்பகுள மைதானம், மரக்கடை, லிங்கப்ப செட்டி வீதி, தியாகராய புது வீதி உள்ளிட்ட இடங்களில் வாக்குசேகரிப்பு மேற்கொண்டார். அப்போது, பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரியால், பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டது. கோவையில் இருந்த மத்திய அரசு நிறுவனங்கள் மூடப்பட்டது. வேலை வாய்ப்பின்மைதான் மத்திய அரசின் சாதனைகள் என குற்றம்சாட்டிய பி.ஆர் நடராஜன், மூடப்பட்ட தொழிற்கூடங்களை திறக்கவும், ஜி.எஸ்.டி. வரியை குறைக்கவும் நடவடிக்கை எடுப்போம், என வாக்குறுதி அளித்தார்.