கோவை: ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், இருகூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகியை ரயில்வே போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், இருகூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகியை ரயில்வே போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை இருகூர் பகுதியை சேர்ந்த சந்திரன். அதேபகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக பேரூராட்சி தலைவராக பதவி வகித்தவர். மேலும், இவர் தி.மு.க.வில் இருகூர் பகுதியின் பொறுப்பாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 8-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தி.மு.க. தேர்தல் நேர்காணலுக்கு சென்றுவிட்டு, கோவை திரும்பும் வழியில் ரயிலில் பயணம் செய்த சக பெண்களிடம் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பெட்டியில் பயணம் செய்த பெண்கள்கூச்சலிடவே, பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சந்திரன் மற்றும் சன் ராஜேந்திரன் மற்றும் மூன்று பேர் தவறுதலாக நடந்து விட்டதாகக் கூறி , ரயில்வே போலீஸாரிடம் எழுதிக்கொடுத்துவிட்டு சமாதானம் செய்துவிட்டு கோவை வந்துள்ளனர்.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, சென்னையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாகக் கூறி சேலம் ரயில்வே போலீசார் மற்றும் சூலூர் போலீசார் சந்திரனை சூலூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைத்து கைது செய்தனர்.
கோவை இருகூர் பகுதியை சேர்ந்த சந்திரன். அதேபகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக பேரூராட்சி தலைவராக பதவி வகித்தவர். மேலும், இவர் தி.மு.க.வில் இருகூர் பகுதியின் பொறுப்பாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 8-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தி.மு.க. தேர்தல் நேர்காணலுக்கு சென்றுவிட்டு, கோவை திரும்பும் வழியில் ரயிலில் பயணம் செய்த சக பெண்களிடம் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பெட்டியில் பயணம் செய்த பெண்கள்கூச்சலிடவே, பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சந்திரன் மற்றும் சன் ராஜேந்திரன் மற்றும் மூன்று பேர் தவறுதலாக நடந்து விட்டதாகக் கூறி , ரயில்வே போலீஸாரிடம் எழுதிக்கொடுத்துவிட்டு சமாதானம் செய்துவிட்டு கோவை வந்துள்ளனர்.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, சென்னையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாகக் கூறி சேலம் ரயில்வே போலீசார் மற்றும் சூலூர் போலீசார் சந்திரனை சூலூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைத்து கைது செய்தனர்.