கோவை : கோவை வனப்பகுதிக்குட்பட்ட வேட்டை தடுப்பு காவலர்களை தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் அதிவிரைவு படையினருக்கும் வாழ்நாள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை : கோவை வனப்பகுதிக்குட்பட்ட வேட்டை தடுப்பு காவலர்களை தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் அதிவிரைவு படையினருக்கும் வாழ்நாள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோவை வனப்பகுதிக்குட்பட்ட 136 வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் வாழ்நாள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு அதிவிரைவு படையினரும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், 10 பேர் பயனடைய உள்ளனர்.
இந்தக் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ. 1 லட்சம் வரை மருத்துவ சிகிச்சையும், ஒருவேளை இறப்பு ஏற்பட்டால் ரூ. 1.5 லட்சம் வரையில் இழப்பீடும் பெற முடியும். இந்த திட்டத்தில் 6 வேட்டை தடுப்பு காவலர்களும், 10 அதிவிரைவு படையினரும் என மொத்தம் 146 பேர் பயனடைகின்றனர். இந்த திட்டத்திற்கான தொகையை மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளை செலுத்துகிறது.
"இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகள் ரூ. 1 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை பயனாளி உயிர் இழந்துவிட்டால், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 1.5 லட்சம் கிடைக்கும். அதிவிரைவுப் படையைச் சேர்ந்த ஆர். வெங்கடேசன் என்பவர் விநாயகனை விரட்டும் போது, எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இதன்மூலம், அதிவிரைவுப் படையினரையும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்க முடிவு செய்தோம்.
கடந்த 2017-ம் ஆண்டு காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட 2 வேட்டை தடுப்பு காவலர்களுக்கு இந்தக் காப்பீடு திட்டம் முதன்முதலில் வழங்கப்பட்டது. ஆபத்தான பணியில் ஈடுபடும் இதுபோன்ற ஊழியர்களுக்கு காப்பீடு செய்யாததால், அவர்களுக்கு பொதுமக்களிடம் திரட்டப்பட்ட நிதியின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது," என்கிறார் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் பார்த்திபன்.
இது குறித்த காப்பீடு சான்றிதழ்களை மாவட்ட வன அதிகாரி டி. வெங்கடேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கோவை வனப்பகுதிக்குட்பட்ட 136 வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் வாழ்நாள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு அதிவிரைவு படையினரும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், 10 பேர் பயனடைய உள்ளனர்.
இந்தக் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ. 1 லட்சம் வரை மருத்துவ சிகிச்சையும், ஒருவேளை இறப்பு ஏற்பட்டால் ரூ. 1.5 லட்சம் வரையில் இழப்பீடும் பெற முடியும். இந்த திட்டத்தில் 6 வேட்டை தடுப்பு காவலர்களும், 10 அதிவிரைவு படையினரும் என மொத்தம் 146 பேர் பயனடைகின்றனர். இந்த திட்டத்திற்கான தொகையை மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளை செலுத்துகிறது.
"இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகள் ரூ. 1 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை பயனாளி உயிர் இழந்துவிட்டால், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 1.5 லட்சம் கிடைக்கும். அதிவிரைவுப் படையைச் சேர்ந்த ஆர். வெங்கடேசன் என்பவர் விநாயகனை விரட்டும் போது, எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இதன்மூலம், அதிவிரைவுப் படையினரையும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்க முடிவு செய்தோம்.
கடந்த 2017-ம் ஆண்டு காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட 2 வேட்டை தடுப்பு காவலர்களுக்கு இந்தக் காப்பீடு திட்டம் முதன்முதலில் வழங்கப்பட்டது. ஆபத்தான பணியில் ஈடுபடும் இதுபோன்ற ஊழியர்களுக்கு காப்பீடு செய்யாததால், அவர்களுக்கு பொதுமக்களிடம் திரட்டப்பட்ட நிதியின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது," என்கிறார் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் பார்த்திபன்.
இது குறித்த காப்பீடு சான்றிதழ்களை மாவட்ட வன அதிகாரி டி. வெங்கடேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.