நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 10-ம் தேதிக்கு உதகை தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 10-ம் தேதிக்கு உதகை தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தற்போது பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இந்த வழக்கில் ஈடுபடுத்த திட்டம் தீட்டிய வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் இணையதளம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று குற்றவாளிகள் 10 பேரும் உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். அப்போது, குற்றவாளிகள் அனைவரும் எதிர்வரும் ஏப்ரல் 10-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி வழக்கை, அன்றைய தினத்திற்கு நீதிபதி வடமலை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தற்போது பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இந்த வழக்கில் ஈடுபடுத்த திட்டம் தீட்டிய வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் இணையதளம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று குற்றவாளிகள் 10 பேரும் உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். அப்போது, குற்றவாளிகள் அனைவரும் எதிர்வரும் ஏப்ரல் 10-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி வழக்கை, அன்றைய தினத்திற்கு நீதிபதி வடமலை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.