கோவை : கோவையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மறுபரிசீலனை செய்யக் கோரி சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கோவை : கோவையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மறுபரிசீலனை செய்யக் கோரி சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

17-வது நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. காலியாக உள்ள 18 சட்டமன்றத் தேர்தலுக்கும் இதனுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. நேற்றுடன் வேட்புமனுக்கள் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், இன்று அதற்கான பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய செய்த பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த தேர்தல் மன்னன் நூர் முஹம்மது, சுந்தர் ராஜ், யுவராஜ், உமர் அலி ஆகியோரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "ஒரு சிறிய இடத்தில் காலியாக உள்ளது நிரப்பப்படவில்லை. சரி என டிக் செய்ய வேண்டிய இடத்தில் அது விடுபட்டுள்ளது. ஒரு எழுத்து தவறாக உள்ளதால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் காரணம் கூறி தங்களது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்த வேட்பு மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும்," எனக் கூறி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
மேலும், இத்தனை முறை மனு தாக்கல் செய்ய வந்தபோது, தவறுகளை அதிகாரிகள் சுட்டி காட்டதது ஏன்..? என கேள்வி எழுப்பி காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றம் மூலமே இப்பிரச்சனையை தீர்த்து கொள்ள முடியும் என அதிகாரிகள் சமாதானம் செய்தும், அதனை நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் ஏற்று கொள்ளவில்லை. பெரிய கட்சிகள் மட்டுமே போட்டியிட வேண்டும் என இருப்பின் ஜனநாயகம் எங்கே உள்ளது. இங்கு பணம் படைத்தவர்களே போட்டியிட முடியும். சாதாரண மனிதன் தேர்தலில் போட்டி என்பது வெறும் கனவாகப் போகும், என்றனர்.