நீலகிரி : 2ஜி வழக்கில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா மீண்டும் சிறை செல்வது உறுதி என நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
நீலகிரி : 2ஜி வழக்கில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா மீண்டும் சிறை செல்வது உறுதி என நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.பி. தியாகராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். நீலகிரி தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்க மேட்டுப்பாளையம் வந்த அ.தி.மு.க. வேட்பாளர் எம்.தியாகராஜனுக்கு, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்பட 3,000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர், கூட்டணி கட்சியினருக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது :- இந்தத் தேர்தலில் நாடே உன்னிப்பாக கவனிக்கும் தொகுதியாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உள்ளது. இங்கு அ.தி.மு.க., சார்பில் தொகுதிக்குட்பட்ட வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், தி.மு.க.,விற்கு போட்டியிட இங்கு ஆள் கிடைக்காமல், பெரம்பலூரில் இருந்து அழைத்து வரப்பட்ட ஆ.ராசா நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் 2ஜி முறைகேடு மூலம் தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் உலகளவில் அவமானத்தை தேடி தந்தவர். இவ்வழக்கின் மேல்முறையீட்டில் இவர் மீண்டும் சிறை செல்வார். கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு வெற்றி பெற்று விடலாம் என அவர் நினைப்பது நடக்காது. கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு, இத்தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் அ.தி.மு.க. வேட்பாளர் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பு நிறைவேற்றப்படும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகள் சேர்க்கப்படும், என்றார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.பி. தியாகராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். நீலகிரி தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்க மேட்டுப்பாளையம் வந்த அ.தி.மு.க. வேட்பாளர் எம்.தியாகராஜனுக்கு, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்பட 3,000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர், கூட்டணி கட்சியினருக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது :- இந்தத் தேர்தலில் நாடே உன்னிப்பாக கவனிக்கும் தொகுதியாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உள்ளது. இங்கு அ.தி.மு.க., சார்பில் தொகுதிக்குட்பட்ட வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், தி.மு.க.,விற்கு போட்டியிட இங்கு ஆள் கிடைக்காமல், பெரம்பலூரில் இருந்து அழைத்து வரப்பட்ட ஆ.ராசா நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் 2ஜி முறைகேடு மூலம் தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் உலகளவில் அவமானத்தை தேடி தந்தவர். இவ்வழக்கின் மேல்முறையீட்டில் இவர் மீண்டும் சிறை செல்வார். கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு வெற்றி பெற்று விடலாம் என அவர் நினைப்பது நடக்காது. கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு, இத்தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் அ.தி.மு.க. வேட்பாளர் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பு நிறைவேற்றப்படும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகள் சேர்க்கப்படும், என்றார்.