கோவையில் தேர்தல் கூட்டம் முடிந்து வீடு திரும்பிய இந்து அமைப்பு பிரமுகரின் வாகனம் எரிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை : கோவையில் தேர்தல் கூட்டம் முடிந்து வீடு திரும்பிய இந்து அமைப்பு பிரமுகரின் வாகனத்தை ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவையில் தேர்தல் கூட்டம் முடிந்து வீடு திரும்பிய இந்து அமைப்பு பிரமுகரின் வாகனத்தை ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரத் சேனாவின் மாநிலச் செயலாளர் வாசு (39). இவர் ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பன் நகரில் வசித்து வருகிறார்.நேற்று இரவு கண்ணப்பன் நகர் பொதுக் கூட்டத்தை முடித்து விட்டு, சுமார் 1 மணியளவில் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும், அவர் தனது பொலிரோ வாகனத்தை தனது வீட்டு வாசலில் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 அளவில் பொலிரோ வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ எரியும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர், வாசுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர். 

பின்னர் தகவலறிந்து வந்த ரத்தினபுரி போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர் ஜீப்பின் மீது பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. இந்தக் காட்சிகள் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், இந்த ஹெல்மெட் அணிந்து வந்த நபர் யார்.. ?, எதற்காக தீ பற்ற வைத்தார்..? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் கூட்டம் முடித்துவிட்டு வீடு திரும்பிய இந்து அமைப்பு நிர்வாகியின் வாகனத்தை மர்ம நபர் எரித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...