கூடலூரில் வனத்துறையினர் பொருத்தியிருந்த கூண்டில் ஆண்புலி சிக்கியது

நீலகிரி : கூடலூர் அருகே உள்ள அம்பலமூலா கிராம மக்களை புலி அச்சுறுத்தி வரும் நிலையில், வனத்துறையினர் பொருத்தியிருந்த கூண்டில் 13 வயது மதிப்புள்ள ஆண் புலி சிக்கியது.

நீலகிரி : கூடலூர் அருகே உள்ள அம்பலமூலா கிராம மக்களை புலி அச்சுறுத்தி வரும் நிலையில், வனத்துறையினர் பொருத்தியிருந்த கூண்டில் 13 வயது மதிப்புள்ள ஆண் புலி சிக்கியது. 

கூடலூர் அருகேயுள்ள அம்பலமூலா கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக புலி நடமாட்டத்தை பொதுமக்கள் நேரில் பார்த்ததையடுத்து, வனத்துறை 8 இடங்களில் தானியங்கி கேமிராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும், பொதுமக்கள் மாலை தேரங்களில் தனியாக வருவதை தவிர்க்கவும், தேயிலை தோட்டங்களுக்கு தனிமையில் செல்வதை தவிர்க்க வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.



இதனிடையே, கூடலூரை ஒட்டியுள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு வனத்துறை பணியாளர்களை புலி தாக்கியது. இப்பகுதி இரு மாநில எல்லையாக இருப்பதால், இந்த புலிதான் கூடலூர் அம்பலமூலா கிராமத்தில் சுற்றிவருகிறதா..? என்ற கண்ணோட்டத்தில் வனத் துறையினர் விசாரித்து வந்தனர். 



இந்த நிலையில், வயநாடு இருளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் 13 வயது மதிக்கத்தக்க ஆண் புலி சிக்கியது. இதன் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாலும், பல்லும் விழுந்துள்ளதால் வனப்பகுதியில் விடுவது குறித்து உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்குப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...