கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவின் சொத்து மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை

நீலகிரி : நீலகிரி மக்களவைத் தேர்தல் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா இன்று வேட்பு மனு தாக்கல் செய்த போது, கடந்த 5 ஆண்டுகளில் சொத்து பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களே இந்த தேர்தலிலும் தாக்கல் செய்துள்ளார்.

நீலகிரி : நீலகிரி மக்களவைத் தேர்தல் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா இன்று வேட்பு மனு தாக்கல் செய்த போது, கடந்த 5 ஆண்டுகளில் சொத்து பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களே இந்த தேர்தலிலும் தாக்கல் செய்துள்ளார்.

அதாவது, ஆ.ராசாவின் பேரில் அசையும் சொத்துக்கள் 1 கோடியே 45 லட்சத்து 90 ஆயிரத்து 709 ரூபாயும், அசையா சொத்துக்கள் மதிப்பு 14 லட்சத்து 87 ஆயிரத்து 419 ரூபாயும் உள்ளது. மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையும் சொத்துக்கள் 93 லட்சத்து 93 ஆயிரத்து 597 ரூபாயும், அசையா சொத்துக்கள் 14 லட்சத்து 12 ஆயிரத்து 975 ரூபாயும் இருக்கிறது. அதேபோல, மகள் மயூரி பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ. 18 லட்சத்து 15 ஆயிரத்து 400 ரூபாயும், பரம்பரை சொத்துக்களில் அசையும் சொத்து மதிப்பு 41 லட்சத்து 3 ஆயிரத்து 540 ரூபாயும், அசையா சொத்துக்கள் 14 லட்சத்து 53 ஆயிரத்து 875 ரூபாயும் என மொத்தம் 3 கோடியே 75 லட்சத்து 42 ஆயிரத்து 880 ரூபாயும் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

இதில், ஆ. ராசாவுக்கு சொந்தமாக 108 சவரன் தங்கமும், மனைவி பரமேஸ்வரிக்கு சொந்தமாக 175 சவரன் தங்க நகைகளும் மற்றும் மகள் மயூரிக்கு 25 சவரன் தங்க நகைகளும் உள்ளன. ராசாவுக்கு சொந்தமாக 4.182 கிலோ வெள்ளியும், மனைவிக்கு சொந்தமாக 10 கிலோ வெள்ளியும், மகளுக்கு சொந்தமாக ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர கம்மல் மற்றும் நெக்லஸ் உள்ளன.

ஆ. ராசாவின் பெயரில் திருச்சியில் ரூ. 32 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான வீடும், மனைவி பரமேஸ்வரி பெயரில் ரூ.14 லட்சம் மதிப்பிலான 10.53 ஏக்கர் நிலம் திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ளது. பெரம்பலூரில் ரூ. 8 லட்சத்து 3 ஆயிரத்து 875 ரூபாய் மதிப்பிலான பரம்பரை சொத்தாக 1.62 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும், ரூ. 13 லட்சம் மதிப்பிலான நான்கு சக்கர வாகனமும் உள்ளது.

ஆ.ராசா மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், வருமான வரித்துறையில் மதிப்பீடு செய்யப்படாமல் ரூ. 25 லட்சத்து 52 ஆயிரத்து 260 தொகை நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...